சந்தோசம் வரும் போது
அதைப்பற்றி சிந்தனை செய்யாதே;
அது போகின்ற போது
அதைப்பற்றிய சிந்தனை செய்.

- அரிஸ்டாடில்



எண்ணத்திற்கேற்ப 
வசதிகளைப் பெருக்குவதை விட
வசதிகளுக்கேற்ப 
எண்ணங்களை குறைப்பது நலம்.

- அரிஸ்டாட்டில்


வறுமையே
புரட்சிக்கும் குற்றங்களுக்கும்
தாயகம்.

- அரிஸ்டாட்டில்


ஒரு நகரம்
நல்ல சட்டங்களினால்
ஆளப்படுவதை விட
நல்ல ஒருவரால்
ஆளப்படுவதே மேலானது.

- அரிஸ்டாட்டில்


கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது.
ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் 
சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் 
கோபப்படுவது எல்லோருக்கும் வராது.

- அரிஸ்டாட்டில்


பொருட்களின் புறத் தோற்றத்தை
வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல்
அவற்றின் அகத் தன்மையையும்
புலப்படுத்துவதே கலையின் குறிக்கோள்.

- அரிஸ்டாட்டில் 


சந்தோசம் வரும் போது
அதைப் பற்றி சிந்தனை செய்யாதே;
அது போகின்ற போது
அதைப் பற்றிய சிந்தனை செய்.

- அரிஸ்டாட்டில்


இரண்டாம் தரமான 
மனிதர்களைக் கொண்டு
முதல் தரமான அரசாங்கத்தை 
உருவாக்க முடியாது.

-அரிஸ்டாட்டில்



அவனவனுக்கு உரித்தானதை 
அவனவனுக்கு வழங்குவது தான் 
நீதி.

-அரிஸ்டாட்டில் 



முனிவரின் மூளையில் கூட 
முட்டாள்தனம் ஒரு மூலையில் இருக்கும்.

-அரிஸ்டாட்டில் 



கட்டளையிட விரும்புபவன்
முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

-அரிஸ்டாட்டில் 


ஒருவனுடைய மனம் 
தூய்மையாக இல்லாவிட்டால்
பணமோ, வலிமையோ, அழகோ 
அவனுக்குப் பயன்படாது.

-அரிஸ்டாட்டில் 


ஒரு குடிமகன் ஆள்பதற்கு மட்டுமல்ல, 
ஆளப்படுவதற்கும் தக்கவனாய் இருத்தல் வேண்டும்.

-அரிஸ்டாட்டில்



கல்வியும் நன்னடத்தையுமே  
ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன.

-அரிஸ்டாட்டில் 


கல்வியின் வேர்களோ கசப்பானவை, 
ஆனால் கனியோ இனிப்பானது. 

-அரிஸ்டாட்டில்


அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது.  
நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம்
நம்மால்  அன்பு செலுத்த முடியாது. 

- அரிஸ்டாட்டில்


விமர்சனம் செய்பவனே நண்பன், 
கூழைக்கும்பிடு போடுபவனே  முதல் எதிரி.

- அரிஸ்டாட்டில்  



வசந்தம் 
ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. 
அது போலத்தான்  உயர்வதும்.

- அரிஸ்டாட்டில்