எவனொருவன் தனக்குத் தானே 
கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு 
அவற்றை கடைப்பிடித்து வாழ்கிறானோ 
அவனே சுதந்திரமானவன்.

- மகாத்மா காந்தி 



தாய் மொழிகளுக்கு 
உரிய உன்னத ஸ்தானத்தை 
கொடுக்காத எந்தக் கல்வித் திட்டமும்  
கல்விப் பிரச்சினையின் விளிம்பைக் கூடத்  
தொடத் தகுதியற்றதாகும்.

- மகாத்மா காந்தி 



நீங்கள் நாட்டுக்கு போதிக்க வேண்டிய
நெறியின் தலையாய அம்சம்
வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதல்ல.
வாளைக் கண்டு இனியும்
பயப்படாமல் இருப்பதே மேல்.

- காந்தி



மற்றவர்களை கெட்டவர்கள் என்று
சொல்வதன் மூலம் நாம்
நல்லவர்களாகிவிட மாட்டோம்

- மகாத்மா காந்தி

நட்பு என்பது உடன்படிக்கையன்று;
கைம்மாறு வேண்டாத ஒரு உறவேயாகும்.

- மகாத்மா காந்தி




பிறரை தாழ்த்துபவன்
தானும் தாழ்ந்து போவான்
என்பது இயற்கை தர்மமாகும்.

- மகாத்மா காந்தி


கடவுள் மாறாதவர்.
அவரைப்பற்றி
மக்கள் தெரிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களே
மாறிக் கொண்டிருக்கின்றன.

- காந்தி


மென்மைத் தன்மை, சுய தியாகம்,
பரோபகாரம் போன்றவை
எந்த ஒரு தனிப்பட்ட மதம்
அல்லது இனத்திற்கு மட்டும்
சொந்தமானதல்ல.

- மகாத்மா காந்தி


உண்மையை கூறும்போது
அது யாரை தாக்குகிறதென்று
பார்க்காதே.

- மகாத்மா காந்தி



அறிவைக் கொண்டு
ஆண்டவனை அறியலாம்
என்பது முடியாத செயல்;
அறிவை விட நம்பிக்கை மேலானது.
நம்பிக்கை உடையவன்
எளிதாக முடிக்க வல்லவன்,
இறைவனையும் அவன் அறிவான்.

- மகாத்மா காந்தி


நாம் திருந்தும்போது
அரசும் திருந்தியே தீரும்.

-மகாத்மா காந்தி


சூதாட்டத்திற்காகவும் குடிக்கவும்
உங்களால் செலவிடப்படும் பணம்
உங்களுக்கு இரட்டை நஷ்டங்களைக் கொண்டு வரும்.
முதலாவதாக பணத்தை இழக்கிறீர்கள்.
இரண்டாவதாக உங்கள் கௌரவத்தையும்
ஆரோக்கியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.

- காந்தி



நீங்கள் எதை செய்தாலும்
உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும்
உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

- மகாத்மா காந்தி 

ஹிம்சையை அஹிம்சையால் வெல்லமுடியாமல் போகுமாயின்
அதற்குக் காரணம் உபயோகிப்பவரின் மனதின் பலவீனமே.

- காந்தியடிகள்

மற்றவர்களை கெட்டவர்கள் என்று
சொல்வதன் மூலம்
நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்.

- மகாத்மா காந்தி


அஹிம்சையிலும் சத்தியத்திலும்
தோல்வி என்பதே கிடையாது.

- மகாத்மா காந்தி 

சிரமமின்றி இலாவகமாகச் 
செய்து முடிக்க வேண்டுமென்று
எதிர்பார்ப்பதை விட, 
விடா முயற்சியுடன்  உழைத்து 
செய்து முடிக்க
நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

-காந்தி



எறும்புக்குத் தேவைப்படுவதைவிட
ஆயிரம் மடங்கு உணவு
யானைக்குத் தேவைப்படுகிறது.
ஆனால் இது ஏற்றத்தாழ்வின் அறிகுறி அல்ல.

-காந்தி


நண்பர்களைப் பற்றி பெருமையாக நிறையப் பேசுங்கள்;
பிடிக்காதவர்களைப் பற்றி எந்த இடத்திலும் எதுவும் பேசாதீர்கள்.

-காந்தி 

வாடிக்கையாளர் என்பவர்
நம் கடைக்கு வரும் மிக முக்கியமான நபர்.
அவர் நம்மை நம்பி அல்ல,
அவரை நம்பித்தான் நாம் இருக்கிறோம்.

-காந்திஜி