எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே
தன் வாழ்வு மட்டும் நிலையானது
என்று எண்ணி மனித மனம்
துன்பத்துக்கு ஆளாகிறது.
- புத்தர்
குழந்தையாய் பிறந்து வளர்ந்து
சிறுவனாகி வாலிபனாய் மகிழும் நாம்
வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை .
- புத்தர்
உண்மை பேசுங்கள்;
கேட்டவர்க்கு இயன்றதைக் கொடுங்கள்;
இந்த இரு வழிகளாலும் ஒருவன்
தேவர்களின் சந்நிதியை அடையலாம்.
- புத்தர்
நம் நல் செயல்களும்
நம் தீய செயல்களும்
நம்மை நிழல் போல
ஓயாது தொடர்ந்து வருகின்றன.
- புத்தர்
ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம்
ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று
சமாதானம் அடையும் மனதில்
இழப்பு இலகுவாகி
நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.
- புத்தர்
சிந்தனை எதுவோ
அதுவாகவே நீயாகிறாய் .
- புத்தர்
அமைதியை விட
மேலான மகிழ்ச்சி
வேறெதுவுமில்லை
- புத்தர்
அதனதன் தன்மை அறிந்தே
நம்பிக்கை வைக்க வேண்டும்.
-புத்தர்
நமது உதடுகளை
அரண்மனை வாயிற் கதவுகளைப் போல
பாதுகாக்க வேண்டும்.
நமது வாயிலிருந்து வெளிப்படும்
ஒவ்வொரு சொல்லும்
சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.
-புத்தர்
ஒவ்வொரு மாற்றத்திற்கும்
ஒரு காரணம் உண்டு.
காரணமின்றி விளைவில்லை.