கடந்த கால நினைவலைகள் 
மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை;
வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே 
அறிவாளிக்கு அடையாளம்.

- பெர்னாரட்ஷா 

சூழ்நிலைக்கேற்ப தன்னை
மாற்றிக்கொள்பவர்களே
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

- பெர்னாட்ஷா


பெண்களிலே
இரு பிரிவினரே உண்டு;
அழானவர்கள் ஒன்று;
அழகானவர்கள் என்று
நம்பிக் கொண்டிருப்பவர்கள் மற்றொன்று.

- பெர்னாட்ஷா


நெற்றியைக் காயப் படுத்துவதை விட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.

- பெர்னாட்ஷா


செயல்புரியும் ஆற்றல் உள்ளவன்
செயல் புரிவான்;
அது இல்லாதவன்
வெறுமனே பேசிக்கொண்டு இருப்பான்.

-பெர்னாட்ஷா


பணம் ஆறாம் அறிவு போன்றது;
அதில்லாமல்
மற்ற ஐந்து அறிவுகளையும்
நீங்கள் பயன்படுத்தமுடியாது.

-பெர்னாட்ஷா


என்றுமே
புத்தம் புது அறிவு
முதிர்ந்த அறிவுடன்
முரண்படுகிறது .

-பெர்னாட்ஷா


பல்வலி கொண்டவனுக்கு
அவனைத் தவிர  உலகில் அனைவருமே
ஆனந்தமாக வாழ்வதாகத் தோன்றும்.

-பெர்னாட்ஷா


உண்மையை சொல்வது தான் 
உலகிலேயே மிகப் பெரிய நகைச்சுவை.

- பெர்னாட்ஷா 

நீ இறக்கும் போது கடவுளை
உனக்கு கடன் பட்டவனாக ஆக்கவேண்டும்.
அப்படி நீ வாழ வேண்டும்.

- பெர்னாட்ஷா



வாழ்க்கை, எல்லோரையும் ஒரே மட்டமாக்குகிறது.
மரணம் தான் மேலோரைப் புலப்படுத்துகிறது.

- பெர்னாட்ஷா 


நண்பர்கள் இருப்பது நல்லது.
ஆனால் அவர்களின் உதவியை 
நாடுவது நல்லதல்ல.

- பெர்னார்ட்ஷா 


பசிக்காத போதும் உண்பவன்
தன் பற்களாலேயே
தனக்கு சவக்குழி பறிக்கிறான்.

- பெர்னார்ட்ஷா 


நல்லொழுக்கம் என்பது
உனக்கு நீயே அளித்துக்கொள்ளும்
நன்மதிப்பாகும்.

- பெர்னாட்ஷா 

உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே
உண்மையான இன்பம் காணுகிறார்கள்.

- பெர்னார்ட்ஷா 

அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார்,
அது சோதனையைத் தந்த பிறகுதான் 
பாடத்தை போதிக்கிறது.

- பெர்னாட்ஷா 

உண்மையை சொல்வதுதான் என்னுடைய நகைச்சுவை முறை.
உண்மைதான் உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவை.

-பெர்னார்ட்ஷா 

இயல் உணர்வு இல்லாத அறிவுக்கு மடத்தனம் என்று பெயர்;
இயல் உணர்வுடன் கூடிய அறிவுக்கு விவேகம் என்று பெயர்.

-பெர்னாட்ஷா 

நீங்கள் கொடுத்த அடியை 
திருப்பிக் கொடுக்காதவனிடம் 
எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனென்றால் அவன் உங்களை 
மன்னிக்கவோ அல்லது உங்களை நீங்களே 
மன்னித்துக்கொள்ளவோ 
அவன் தயாராக இல்லை.

-பெர்னாட்ஷா 




வாழ்க்கை என்பது ஒரு தீப்பந்தம், 
அதை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கு முன் 
எவ்வளவு  பிரகாசமாய் முடியுமோ அத்தனை பிரகாசமாய் 
எரியச் செய்யவேண்டும்.

-பெர்னாட்ஷா