பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு  
அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே 
ஆசிரியர்கள்.

- ஷேக்ஸ்பியர் 

வாழ்க்கையில் வெற்றி பெற மூறு வழிகள்:
1. பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்துகொள்ள முயலுங்கள்.
2. பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

- வில்லியம் ஷேக்ஸ்பியர்


பெரும்பாலும் முதல் சிந்தனை
தெளிவற்றதாக இருக்கும்;
எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்.

- ஷேக்ஸ்பியர்


நாம் எழுத்தால்
புத்தகத்தால்
சண்டையிடுகிறோம்.

-ஷேக்ஸ்பியர்



பழி வாங்குதல் வீரமன்று
பொறுப்பதே வீரம்.

- ஷேக்ஸ்பியர்


சட்டத்தின் மிக முக்கியமான பண்பு இரக்கமே.
ஆனால் இரக்கமற்ற கொடியவர்களோ
அதை கொடிய ஆயுதமாக உபயோகிக்கிறார்கள்.

- ஷேக்ஸ்பியர்


உண்மையைச் சொன்னால்
காதலுக்கும் நியாயத்திற்கும்
இப்பொழுதெல்லாம்
உறவு அதிகமில்லை.

-ஷேக்ஸ்பியர்


அழகியப் பெண் வாதாடும்பொழுது
எல்லாப் பேச்சாளர்களும் 
ஊமையாகி விடுகிறார்கள்.

- ஷேக்ஸ்பியர் 



புனிதமற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்போது
கௌரவமான பதவி தனி உடமையாகி விடுகிறது.

- ஷேக்ஸ்பியர்


எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்;
ஆனால் சிலரிடமே பேச்சு  கொடு.

எவர் துன்பத்தையும் தெரிந்து கொள்;
ஆனால் உன் கருத்தை கூறிவிடாதே.

-ஷேக்ஸ்பியர்


தைரியமே நம்முடைய 
மிக நெருங்கிய நண்பன்.

- ஷேக்ஸ்பியர் 


உண்மைக் காதல்
கண்களால் வருவதில்லை
மனத்தால் வருகிறது.

- ஷேக்ஸ்பியர் 


முயற்சி என்பது ஒரு தடாகம்.
அதில் நீந்தி கரை சேரும்போது 
ஏற்படுவது போன்ற இன்பம் 
உலகத்தின் வேறு எந்த ஒன்றிலும் 
கிட்டுவதில்லை.

-ஷேக்ஸ்பியர்


வேகமாக ஓடுபவர்கள் தடுக்கி விழுவார்கள்.
அறிவோடு மெதுவாகச் செல்லவேண்டும்.

- ஷேக்ஸ்பியர் 


கவலை 
வாழ்க்கையின் எதிரியாகும்.

-ஷேக்ஸ்பியர் 




அனுபவம் ஓர் உயர்ந்த நகை. 
அது அரியதாகத்தான் இருக்கும்.
ஏனெனில், மிகவும் கூடுதலான 
விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது.

-ஷேக்ஸ்பியர் 



அரக்க வலிமை பெற்றிருப்பது மேன்மையானது;
அரக்கனைப் போல் அதைப்
பயன்படுத்துவது தான் கொடுமையானது.

-ஷேக்ஸ்பியர்


துன்பத்தால் தாக்குண்டபோது, 
உயர்வு மேலும் உயரும் என்ற உண்மையை அறிந்தேன். 
இதுவே துன்பம் எனக்கு இழைத்த நன்மை.

-ஷேக்ஸ்பியர்


களைப்பு கல்லின் மேலும் 
குறட்டை விடும்,
அமைதியில்லாத சோம்பலுக்கு 
தலையணையும் உறுத்தும்.

-ஷேக்ஸ்பியர் 



உண்மை என்ற அணியை புனைந்து கொண்டால் 
அழகு எவ்வளவு பேரழகாகத் தெரிகிறது.

-ஷேக்ஸ்பியர்