Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
எந்தக் கண்ணாடியும்
ஒரு பெண் அழகில்லை என்று
அவளுக்கு சொல்லியதில்லை.
-பிரான்ஸ் பழமொழி
பலத்தை பலவீனம் அடக்கி ஆளும்
வினோதம் தான் காதல்.
-கபிலர்
சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
-தாமஸ் ஆல்வா எடிசன்
விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி.
அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.
-பகவான் இராமகிருஷ்ணர்
ஒருவன் மீனை உண்பதற்காக
இறைவன் அவனைப் புறக்கணித்தால்
அவன் இறைவனே இல்லை.
-சுவாமி விவேகானந்தர்
வானத்தில் மாளிகை கட்டு தவறில்லை.
ஆனால் தரையில் அஸ்திவாரம் போடு.
- ஓர் அறிஞர்
எந்தக் காரியத்தையும் உற்சாகத்தோடு செய்கிறவன் தன் நோக்கத்தை தவறுவது அபூர்வம்.
-வால்மீகி
பையிலே பணம் இல்லாதவனுக்கு நாக்கிலே தேன் (இனிமையான வார்த்தை ) இருக்க வேண்டும்.
-வாத்தின்ஸ்
உங்கள் கவலைகளை விளம்பரப் படுத்தி பயனில்லை.
ஏனெனில் அவற்றை யாரும் வாங்க மாட்டார்கள்.
- லயன்
மேதைக்கு எல்லாம் தெரியும். வாழ்க்கை நடத்த மட்டும் தெரியாது.
- ஓர் அறிஞர்
தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்;
ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்.
-
வெஸ்ஸிஸ்
பணக்காரர்களின் உணவை விட
ஏழைகளின் உணவே அதிகம் ருசிக்கிறது.
ஏனெனில் ஏழைகள் தான்
பசித்து உண்கின்றனர்.
- ரிக் வேதம்
கோபம் என்பது குறைந்த அளவு பைத்தியமே.
- ஹௌஜ்
கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.
- பல்கேரிய பழமொழி
புத்தகங்கள் இல்லையென்றால்
சரித்திரம் மௌனமாகிவிடும்.
இலக்கியம் ஊமையாகிப்போகும்.
புத்தகம் என்பது மனித குலமே
அச்சு வடிவில் இருப்பது போல.
- பார்பரா சச்மன்
யோசிப்பதானால் ஆழமாக யோசியுங்கள்.
செயல்படுத்துவதானால் தீவிரமாக செயல்படுத்துங்கள்.
விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள்.
எதிர்ப்பதானால் கடைசிவரை எதிர்த்துக் கொண்டிருங்கள்.
- எமெர்சன்
கோபம் என்னும் கொடிய அமிலமானது
அது எறியப்படும் இடத்தைவிட
அதை வைத்துக்கொண்டிருக்கும்
கரத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.
-
கிளாவுண்டல்
புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே.
என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே.
ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.
- சுவாமி விவேகானந்தர்
பேசுபவனை கவனிக்காதே. பேச்சை கவனி. பேச்சின் நீளம் அதன் மதிப்பை குறைத்துவிடும்.
-ஹசரத் அலி
உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம்;
உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது.
-
பாரசீக பழமொழி
Newer Posts
Home